மேலும் சில தகவல்களுடன்…
செந்தழல் ரவி அவர்களின் பதிவை மீண்டும் ஒரு முறை இங்கே பதிப்பிக்கிறேன்…
இதுவரை எந்த பதிவை எழுதுவதற்க்கு முன் யோசித்ததில்லை…அதிகபட்சமாக
பத்து நிமிடத்தில் கடகடவென டைப்செய்வதுதான்…ஆனால் இதனை எழுதுமுன் தினறல்…பெரிய யோசனை…எப்போது பப்ளிஷ் செய்யலாம்….இதனை வலைப்பூவினர் வரவேற்ப்பார்களா ? வெற்றிகரமாக செய்ய முடியுமா ?
ஏற்கனவே என்றென்றும் அன்புடன் பாலா நிறைவாக செய்தாரே !! நம்மாலும்
முடியும் – என்ற உந்துதல் ஏற்பட – முதலில் ஒரு பதிவரிடம் சொன்னபோது அவர் மிகச்சிறந்த வழிகாட்டுதலை தந்தார்…இவ்வளவு பீடிகை வேண்டாம் இல்லையா…விஷயத்துக்கு
வந்துவிடுகிறேன்…!!!
சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் – கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்…இதயம் கனத்துப்போனது…இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி
தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது…!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு…
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்…எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு…தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்…ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்…தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்… இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை….மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்…
இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே…
வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்…அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்…..
இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்…அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN – a/c @ SBI – NEHRUJI NAGAR.)
அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
njaanam@gmail.com
0451-2436844
வங்கி கணக்கு
N.JAYACHANDRAN
SBI Account No: 10261284116
NEHRUJI NAGAR
DINDUKKAL
அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com
ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்…
ICICI A/C : 625301514495
Branch : Kumar Park Branch
Name : Ravindran A
எனக்கு ஒரு மடலும் அனுப்பி தகவலை தெரிவித்துவிட்டால் நன்றாக இருக்கும்…
zyravi@yahoo.com
உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்…!!!
பின்னூட்டத்தில் வினவிய நன்பருக்காக – மாணவியின் மொத்த தேவைப்பாடு ரூ அறுபது ஆயிரம் !!!! வேறு ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்…மேலும் சில பின்னூட்டங்களை பார்த்ததும் தமிழர் நெஞ்சில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை என்பதை அறிந்தேன்…நெஞ்சு நெகிழ்கிறது..
Filed under: Uncategorized | 22 Comments »