கவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்

நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3

இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…

க: வாங்க தனுஷ்!
தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.

த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம்

க: ஆஹா லட்சியமென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். அவனவன் படிச்சி வாழ்க்கையில பெரிய ஆளு ஆகனும்னு ஆசைப்பட்டா நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறத லட்சியமா வெச்சிருக்கறீங்க. அத வெக்கப்படாம வெளிய வேற சொல்லிட்டு அலையறீங்க.

த: ஆமாங்க. கடைசியா படிச்சி பெரிய ஆளாயி என்ன பண்ணப்போறாங்க? எல்லாரும் கல்யாணம் தானே பண்ணிக்க போறாங்க. அதனாலத்தான் நான் அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்

க: ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா? பேசறாம்பாரு…பெரிய இடமா கிடைச்சிது, விட்டா போயிடும்னு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பேசற எகத்தாளத்தப்பாரு.
ஆமாம் அது என்ன பேரு இந்திய ப்ரூஸ்லி?

த: அதுவா? நான் போடற கராத்தே சண்டைய பார்த்து ரசிகர்கள் அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.

க: ஏன்டா ப்ரூஸ்லி ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா? அவர் எப்படியும் செத்து போயிட்டாருங்கர தைரியத்தில நீயா வெச்சிக்கிட்ட. சரி விடு… அந்த காலத்துல தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் மாதிரினு வெச்சிக்கிறோம். சரி உன்னோட படத்துலயே உனக்கு பிடிச்சது எது?

த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.

க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?

த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!

க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்

த: எதுக்குங்க?

க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.

த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…

க: இந்த பாரு இனிமே சும்மா இப்படி மொக்கைத்தனமா பஞ்ச் டயலாக் ஏதாவது பேசின… அவ்ளோ தான். நான் எதுவும் பண்ண மாட்டேன். மக்களே படத்த ஃபிளாப்பாக்கிடுவாங்க…

த: அதுல க்ளைமாக்ஸ் காட்சி கூட அருமையா இருக்குங்களே!

க: டேய் வேணாம் என்னைய டென்ஷனாக்காத! அது ஒரு க்ளைமாக்ஸ் அதுக்கு உனக்கு பெருமை வேற…உன்னைய பேட்டியெடுக்கறதுக்காக என்னைய அந்த ட்ரீம்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லாம் வேற பாக்க வெச்சிட்டானுங்க. ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?

த: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பார்த்தீங்களா? அது அப்படியே நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே இருக்குமே?

க: டேய் டூபாகூர் மண்டையா… அது உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இருந்துச்சா? இதுக்கு முன்னாடி நீ அந்த படம் பார்த்திருக்கயா? தப்பி தவறி இத வெளிய சொல்லிடாத… எல்லாம் கல்லால அடிச்சியே கொன்னுடுவானுங்க…

சரி இதுக்கு மேல நீ கேள்வி கேட்டா தாங்க மாட்ட. ஓடி போயிடு!!!

மக்களே! என்ன நடந்துச்சுனு நீங்களே பாத்துட்டுதான் இருக்கீங்க. நான் சொல்றதுக்கு இதிலே ஒண்ணுமில்லை.நாளைக்கு உங்களை வேற ஒரு பிரபலத்துடன் சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!!!

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – பேரரசு

வணக்கம்!!! நீங்கள் பார்த்து கொண்டிருப்பது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate பார்ட் 2.

இந்த வாரம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் நான்கு வெற்றி திரைப்படங்களை இயக்கிய ஸ்பீட் லாயர் பேரரசு!!!

க: வா மேன்!!! உன்னையத்தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன். நீயே வந்து மாட்டிக்கிட்ட. திருப்பாச்சி படத்தோட வெற்றிக்கு என்ன காரணம்னு நினைக்கிற?

பே: மக்களோட மனச நான் நல்லா புரிஞ்சி வெச்சதுதான் காரணம். படத்துல ஆக்ஷன் சீன் அப்பறம் செண்டிமெண்ட் தான் படத்தோட வெற்றிக்கு காரணம்.

க: ஓ! நீங்க மக்கள் மனச நல்லா புரிஞ்சி வெச்சிருக்கீங்க. ஏன்டா ஒன்றையனா சந்தனத்தை முகத்துல பூசுனா ஆள் அடையாளம் தெரியாதா? எங்க இருந்துடா புடிச்ச இந்த கான்ஸெப்ட.

பே: நான் ஒரு தடவை இப்படித்தான் சந்தனத்தை பூசிக்கிட்டு எங்க வீட்ல இருந்து வெளிய வந்தப்ப எங்க பக்கத்து வீட்டு நாயிக்கு அடையாளம் தெரியாம துரத்துச்சு. அப்பத்தான் சந்தனம் பூசனா யாராலயும் கண்டு பிடிக்க முடியாதுனு தெரிஞ்சிக்கிட்டேன்…

க: டேய் நாயே!!! அது அடையாளம் தெரியாம தொரத்தியிருக்காதுடா.
உன்னைய எல்லாம் விட்டு வைக்கக்கூடாதுனு தான் நாயே அந்த நாய் உன்னைய தொரத்தியிருக்கும்.
சரி உன் படத்து வில்லனுங்க பேரு எல்லாம் கொஞ்சம் நம்ம மக்களுக்கு சொல்லு

பே: பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை, மூளி முங்காயி, பல்லாக்கு பாண்டி, சிலந்தி கருப்பு, பெருச்சாலி கருப்பு

க: அடேய் அர டவுசர் மண்டையா! எங்க இருந்துடா இந்த மாதிரி பேரெல்லாம் பிடிக்கற.

பே: சின்ன வயசுல எல்லாம் என்னைய அப்படித்தான் பசங்க ஓட்டுவாங்க. அதான் அதையே படத்துல யூஸ் பண்ணிக்கிட்டேன்…

க: பாரு வெக்கமே இல்லாம இத வெளிய சொல்லிக்கிட்டு இருக்கு!
சரி நீ பாட்டு எழுதி மக்கள கொடுமை பண்றியாமே! ஏன் அப்படி?

பே: யார் சொன்னா நான் கொடுமை படுத்தறேனு. நான் எழுதன கட்டு கட்டு பாட்டும், அப்பன் பண்ணு தப்புலையும் அந்த வருஷத்துலயே பெரிய ஹிட்.

க: எங்க அந்த அப்பன் பண்ண தப்புல பாட்ட எடுத்துவிடு கேப்போம்

பே: அப்பன் பண்ண தப்புல
ஆத்த பேத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சி சமஞ்சிடுச்சிடா

க:ஓ! நோ!!!
நிறுத்து மேன்!
இது ஒரு பாட்டு இத எழுதனதுல உனக்கு பெருமை வேற?
மவனே நீ மட்டும் இனிமே பாட்டு எழுதனனு கேள்வி பட்டேன்.. உனக்கு சங்குதாண்டி. என்ன புரியுதா?

பே: இந்த பாட்டையும் ஒரு தடவை கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்களேன்…

க: சரி அது என்ன பாட்டு.. பாடி தொலை கேக்கறேன்

பே: கட்டு கட்டு கீரை கட்டு ( கவுண்டர் பாதி பாட்டு வரை கேட்கிறார்)

க: டேய் நிறுத்து! என்னடா கீர கட்டு, ஜப்பான் ஜாக்கெட்டு, ஒடஞ்ச பக்கெட்டுனு பாட்டு எழுதிட்டு இருக்க?
மவனே! ஐ ம் ஸ்ட்ரிக்ட்லி டெல்லிங்…இனிமே யூ நோ பாட்டெழுதிஃபயிங். புரியுதா?

பே: சரிங்க

க: அது சரி… நீ ஏதோ படத்துல எல்லாம் வரியாம். என்ன ராசா விளையாட்டு அது?

பே: அது சும்மாச்சுக்கும்…

க: சும்மாச்சுக்குங்கூட நீ படத்துல நடிக்கக்கூடாது புரியுதா? அஜித் பாவம் படம் எதுவும் ஹிட்டாகலனு உன் படத்துல நடிச்சா அதுல நீயே ஹீரோவாயிட்ட.
மவனே இனிமே இந்த படத்துல பாதில நீ யாரானு எவனாது கேட்டதுக்கப்பறம் பேர் போடறது, அப்பறம் பாட்ஷா மியூசிக்ல வரது இந்த மாதிரி ஏதாவது கேள்விப்பட்டேன்… உன் படத்துல பான்பராக் ரவிய வாயுல கொசு மருந்து அடிச்சி கொன்ன மாதிரி உன்னைய நாங்க கொல்ற நிலைமை வந்துடும் புரிஞ்சிதா?

பே: சரிங்கண்ணே! நான் கிளம்பளாமா?

க: உன்னைய அவ்வளவு சீக்கிரத்துல வீட்டுடுவோமா? நீ என்ன லேசுப்பட்ட ஆளா?

பே: நான் ஏதாவது தெரியாம பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்களேன்.

க: சரி! கடைசியா இந்த கேள்விக்கு மட்டும் பதில சொல்லிட்டு ஓடிப்போ நாயே!

பே: கேளுங்க

க: ஏன்டா Gaptain படத்த ஏற்கனவே அவனவன் நாறடிக்கிறானுங்க. இதுல நீ என்னனா அவர் இடப்புல அருணாக்கயிருல சாமிக்கு படைக்கிற அந்த தட்டை கட்டிவிட்டு துப்பாக்கியால சுட்டா புல்லட் அப்படியே திரும்பி வில்லன அட்டாக் பண்ணும்னு காமெடி பண்ணியிருக்க. அதை நம்பி நம்ம போலிசுக்கெல்லாம் அவர் முதலமைச்சர் ஆன உடனே அரணாக்கயிரும் படையல் தட்டும் கொடுத்தா என்னடா நடக்கும்? எதுக்கு அப்படி பண்ண? நீ வாசிம் கான் ஆளா?

பே: ஐயய்யோ தெரியாம பண்ணிட்டேங்க. இனிமே நான் கோடம்பாக்கம் பக்கமே தலைய வெச்சி கூட படுக்க மாட்டேன். என்னைய விட்டுடுங்க…

(பேரரசு அப்படியே ஜம்ப் செய்து ஓடுகிறார்)

க: மக்களே! ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நல்ல காரியத்தை பண்ணிட்டேன். இனிமே இந்த மாதிரி டைரக்டருங்களை எல்லாம் பெரிய ஆளாக்கி நம்ம மக்கள் ரசனைய கேவலம்னு நினைக்கிற மாதிரி பண்ணிடாதீங்க.

கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – சிம்பு

CNN-IBN Devil’s advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் கேட்டால் முதல்வனில் “Q” TVக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படுமென்பதால் சினிமா நடிகர்களை கேள்விகள் கேட்டு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

தமிழில் கதாநாயகர்களை திக்குமுக்காட வைப்பதில் சிறந்தவர் யார் என்று யோசித்ததில் அனைவரின் மனதிலும் உதித்தது கவுண்டரே! அவர் பல படங்களில் பிஸியாக இருந்தாலும் மக்களுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்த ஒத்துக்கொள்கிறார். இனி…

முதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிம்பு…

க: வாங்க சிம்பு. உங்க வல்லவன் படம் படுதோல்வி அடைஞ்சதுக்கு என்ன காரணம்?

சி: படுதோல்வியா? யார் சொன்னது? படம் வசூல்ல சந்திரமுகிய முந்திடுச்சுனு எனக்கு ரிப்போர்ட் வந்துட்டு இருக்கு.

க: எங்க? அந்த ரிப்போர்ட்ட இங்க காட்டு பார்ப்போம்.

சி: அதெல்லாம் இப்ப இங்க இல்லை. படத்த ஓட விடாமா தடுக்கறதுக்கு ஒரு சிலர் முயற்சி செஞ்சாலும் படம் பயங்கரமா ஓடுதுனு அகில இந்திய லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு ரசிகர் மன்றத்துல இருந்து எனக்கு தகவல் வந்துருக்கு.

க: எங்க தியேட்டர்ல இருந்து ஓட விடாமா தடுக்கவா? அதென்னடா லிட்டில் சூப்பர் ஸ்டார்? யாரு உனக்கு அந்த பேர கொடுத்தது. (கவுண்டர் அவர் பாணிக்கு செல்கிறார்)

சி: தமிழக மக்கள்… (சொல்லிவிட்டு ஸ்டைலாக லுக் விடுகிறார்)

க: டேய் நானே டக்கால்டி! நீ எனக்கே டகால்டி கொடுக்கறயா? உங்க அப்பா அந்த தாடிக்காரனே படத்துல டைட்டில் கார்ட்ல போட்டா நீ லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆயிடுவீயா? (ஹை பிட்ச்சில் கேட்கிறார்). அப்ப உன் தம்பிய லிட்டில் லிட்டில் சூப்பர் ஸ்டாராடா???

சி: இந்த சிம்புவ பத்தி யாருக்கும் இப்ப புரியாது… போக போகத்தான் இவன் திறமை எல்லாருக்கும் புரியும்.

க: சரி அதல்லாம் இருக்கட்டும். ஏன் அந்த பொண்ணு நயந்தாரா உதட்ட புடிச்சி கடிச்சு வெச்ச?

சி: அது படத்துக்கு தேவைப்பட்டுச்சு. படம் பார்த்தா உங்களுக்கே புரியும்.

க: டேய்! உன்னய கேள்வி கேக்கனும்னு அந்த கொடுமைய வேற பார்த்தனேடா… (அழுகிறார்)
அது ஒரு படம். அதுக்கு இந்த காட்சி ரொம்ப முக்கியம்? ஏன்டா சம்பந்தமே இல்லாம நக்மாக்கூட டூயட் ஆடன எனக்கே நீ டக்கால்ட்டி கொடுக்கப்பாக்கற.

சி: அப்ப உங்களுக்கே அந்த காட்சியோட முக்கியத்துவம் புரிஞ்சிருக்கும்.

க: டேய் சிம்பு மண்டையா, ஏன்டா இந்த ஒன்றையனா படத்த எடுக்க உனக்கு ரெண்டு வருஷமாச்சு?

சி: அது அந்த படத்த பார்த்தா உங்களுக்கே புரியும்…

க: வீனா என்னய டென்ஷனாக்காத. ஒன்னுமே இல்லாத ஒன்றையனா படத்த எடுத்து வெச்சிட்டு எத கேட்டாலும் படத்த பாருங்க புரியும்… படத்த பாருங்க புரியும் சொல்லிக்கிட்டே போகற. அதுல புரிஞ்சிக்க அப்படி என்னடா இருக்கு?

சி: நீங்க யார் சொல்லி இந்த மாதிரி கேள்வியல்லாம் கேக்கறீங்கனு எனக்கு தெரியும். “அவன் அம்பானி பொண்ணை கட்டிக்கிட்டு பெரிய ஆளாகணும்னு பாக்கறான். ஆனா நான் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்”

க: உன்னைய எவன்டா ஆக வேணாம்னு சொன்னா?
ஓ! நீ யாரை மனசுல வெச்சி சொல்றனு ஐ அம் கெட்டிங் யா.
ஏன்டா அவனே ஒரு தீஞ்ச மண்டையன். அவன் நடிக்கற படமே ஃப்ளாப் மேல ஃப்ளாப் ஆகுது. இதுல அவன் உனக்கு போட்டி. உங்க அக்கப்போரு தாங்கமுடியலைடா.

சி: போட்டில யார் முதல்ல போறாங்கன்றது முக்கியமில்லை. யார் கடைசியா முன்னாடி போகறாங்கன்றதுதான் முக்கியம்.

க: டேய்! டேய்!!!
இப்பத்தான உனக்கு சொன்னேன். இதுக்கு மேல இங்க பஞ்ச் டயலாக் பேசன உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஆமா…
அதுசரி… அது என்னடா மன்மதன் படத்துல கடைசியா Film By Simbuனு போட்ட?

சி: ஏன்னா அது என்னோட படம். நான் தான் அதை உண்மையாலுமே டைரக்ட் பண்ணேன்…
20 வயசுல டைரக்ட் பண்ற திறமை இங்க யாருக்கு இருக்கு?

க: அப்பறம் எதுக்குடா எடுத்தவுடனே வேற ஒருத்தன் பேற போட்ட???
அவர் என்ன உங்க பினாமியா?
படம் ஃபிளாப் ஆனா அடுத்தவன் பேற போட வேண்டியது ஹிட்டான உங்க பேர போட வேண்டியது. எதுக்குடா இப்படி ஊர ஏமாத்தி திரியறீங்க?

சி: !@#$%^&

க: அது சரி! ஏன்டா எப்ப பார்த்தாலும் கைய விசுக்கு விசுக்குனு சுத்தி எஃபக்ட்ட கொடுக்கற?

சி: ஏன்னா, நான் லிட்டில் சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டார் மாதிரி இந்த மாதிரி ஸ்டைல் பண்ணனும்.

க: டேய் ஆப்ப சட்டி தலையா, அடத்தவங்க ஸ்டைல காப்பி பண்ணாதீங்கடா. உங்களுக்குனு ஒரு ஸ்டைல உருவாக்குங்க. அப்ப தான் உருப்புடுவீங்க.சரி இதெல்லாம் உனக்கு யார்டா சொல்லி கொடுத்தா.

சி: ஆக்ஷன் தான் இங்க. டைரக்ஷன் அங்க. (சொல்லிவிட்டு ஸ்டைலாக திரும்பி பார்க்க. செட்டிற்குள் ஒரு உருவம் வருகிறது)

க: ஐய்யோ கரடி! டேய் சிம்பு மண்டையா நீ பண்ண அலும்பல நான் கேட்டேனு என்னைய கரடிய விட்டு கொல்ல பாக்கறியா?
டேய் யாராவது அத புடிச்சி கட்டுங்கடா…

சி: சார்! கத்தாதீங்க. அது எங்க அப்பா.

TR:
த்ரீ ரோசஸச முந்திடுச்சிடா டாப் ஸ்டாரு
அந்த தனுச முந்துவாண்டா என் லிட்டில் சூப்பர் ஸ்டாரு

க:இவன் வேற வந்துட்டானா?. டேய் ரெண்டு பேரும் இப்படியே ஓடி போயிடுங்க இல்லைனா நானே உங்க மூஞ்சில ஆசிட் ஊத்திடுவேன்.
மக்களே நல்லா பாத்துக்கோங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகமாட்டேன். இவனுங்க பண்ற அளும்புக்கெல்லாம் நீங்களே நல்லா கவனிச்சிக்கோங்க…

இந்த வாரம் முழுதும் இந்த தொடர் வரும்… தினம் ஒரு பிரபலங்களுடன்…

ஏன் இந்த கொலை வெறி???

மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு… சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு… (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)

பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.

ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.

அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு “சமரசிம்மா ரெட்டி”.

சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.

வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.

பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்… ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப…

பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.

நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா… வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.

எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்… டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.

ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!

அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க… எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு… எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க…

அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???

சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி 🙂

தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு… என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் 😉

கோழியின் அட்டகாசங்கள் – 6!!!

மக்களே மீண்டும் உங்களுக்காக கோழியின் அட்டகாசங்கள்…

“டேய் மச்சானுக்கு ஆன்சைட் வந்துடுச்சுடா அடுத்த மாசம் கெளம்பறான்” இது OP

“வாவ்!!! கங்கராட்ஸ்டா மச்சான்…”

“பாலாஜி, அதனால கோழி இப்பல இருந்து டயட்ல இருக்கான்…”

“ஏன்டா அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?”

“அது ஒண்ணுமில்லை… அமெரிக்கா போகும் போது 64 கிலோ வெயிட்ட எடுத்துட்ட்டு போகலாம்னு மச்சான் சொன்னான். அதனால இன்னும் 6 கிலோ குறைச்சிட்டா மச்சான் கூட அமெரிக்கால போயி வேலை தேடலாம்னுதான்…”

“டேய் கோழி உண்மையாடா???”

“ஆமான்டா பாலாஜி… எனக்கும் இங்க போர் அடிக்குது… பேசாம அமெரிக்கா போயிடலாம்னு இருக்கேன்… “

“டேய் கோழி, அது பெட்டி படுக்கைக்கு தான்டா… ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு போக முடியாது. அப்படியே இருந்தாலும் மச்சான் எதாவது ஃபிகரை பிக்கப் பண்ணிட்டு கூப்பிட்டு போகமா உன்னைய கூப்பிட்டு போவானா?”

“டேய் நெஜமாவாடா??? இது தெரியாம ஊர்ல இருந்து வண்டிக்கூட அனுப்ப சொல்லிட்டேன்”, இது கோழி

“என்னடா சொல்ற?”

“ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு… அங்க போனா யூஸ் ஆகுமில்ல… அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?”

“சரிடா இந்த வண்டிய எப்படிடா அங்க எடுத்துட்டு போய் ஓட்டுவ?”

“ஏன்டா நான் என்ன லூசா?
நம்பர் பேட்ல இருக்கற “TN” க்கு பதிலா வண்டில “US”னு எழுதிட்டா போச்சு… போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?”

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா…

ஆர்குட்டில் அலம்பல்

மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்… ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு…

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க…

1:
U looking Mallika Sheravath
i looking Imran aasmi
Come let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

2.
hey annikku Ravi yoda b’day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???
Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

3.
Hi!
if u retain this scrap I will understand that you are interested in meand
if u delete this scrap, it means you are dreaming about me.
Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்)

4.
hi,the numerical value of L+O+V+E=54
but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
54+54= 108
LOVE+LOVE= FRIENDSHIP
so friendship is two times greater than love………….
so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)

5.
heyyy gal,Barcelona hav won the champions league finals!
hurraaaayyyy!!!! come on lets be friends….

(டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?)

6.
generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
awesome pic gal.
kalakita po.. lol

(இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

7.
hi niki.. well can i expect a scrap back from ya..
well thought u are a person who can read and write… is it true.,… ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க)

8.
If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?
scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

9.Scrap- Eyy black beauty,how are you so fair???
If you don’t add me its very unfair…

(இவருக்கு கவிதை வேற…)

10.
Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips….Overall stunning effect…
But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..
ya i know u dont know me.. but who bothers??
come on-add me as friend..
am waiting 2 b ur fan…

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா… ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா…)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா…

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

மதுர!!!

மதுரை மக்களே!!! இது உங்களை பத்தி இல்லை…
நம்ம இளைய தளபதி விஜய் நடிச்ச படம்… அப்ப பாக்காம விட்டுட்டேன். நேற்றுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பாத்துட்டு என்னால பதிவு போடாம இருக்க முடியலை.

இந்த படம் யார் யார் பார்க்கலாம்.
நம்ம முன்னால் பிரதம மந்திரி நரசிம்ம ராவ் மாதிரி சிரிப்பது எப்படினு தெரியாதா? கண்டிப்பா நீங்க இந்த படம் பாக்கனும். நம்ம வாழ்க்கையவிட இந்த உலகத்துல ஏதாவது கொடுமை இருக்கானு விரக்தில இருக்கீங்களா? இது உங்களுக்காகத்தான்.

படத்தோட கதை என்னனா? மன்னிச்சிடுங்க அப்படி எதுவும் இல்லை.

விஜய் மதுரைல கலக்டர். நான் கான்வெண்ட்ல படிச்சி கலெக்டராகல கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சி கலக்டரானவன்னு ஹை-பிட்ச்ல டயலாக் பேசிக்கிட்டே இருப்பாரு (இது எங்களை மாதிரி கவர்மெண்ட் பள்ளிகளில் படித்தவர்களை கேலி செய்வதற்காகத்தான்). சோனியா அகர்வாலை கொலை செய்துவிட்டார் என்ற குற்றத்திற்காக தலை மறைவாக மாறு வேடத்தில் வாழ்கிறார்.

எங்கனு கேக்கறிங்களா? சென்னைல கோயம்பேடு மார்க்கெட்ல. ஆனா 5 நிமிஷத்துக்கு ஒரு தடவை குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட்டுட்டு சண்டை போட்டுட்டு இருப்பாரு. அதுவும் லாரி லாரியா ஆளுங்க வந்து அடி வாங்கிட்டு போறாங்க 🙂

அப்பறம் மாறு வேஷத்தப்பத்தி சொல்லியே ஆகனும். மீசைய ட்ரிம் பண்ணிட்டு (பேரையும் ட்ரிம் பண்ணிடுவாரு… மதுரைவேல் IASஅ மதுரனு ட்ரிம் பண்ணிடுவாரு.. அடையாளம் தெரியக்கூடாதுனு), கைல டேட்டூ குத்திருப்பாரு. அப்பறம் கட் பணியன் வேற போட்டுருப்பாரு. ஒரு சின்ன சூச்சூவைக் கேட்டக்கூட சொல்லிடும் அது விஜய்னு. ஆனா தமிழ்நாடு போலிஸால கண்டுபிடிக்க முடியாது.

அப்பறம் டாக்டருங்கெல்லாம் இந்த படம் பார்த்தே ஆகணும். ஊமை குழந்தையை எப்படி பேச வைக்கனும்னு ஒரு ஐடியா தராரு நம்ம தலைவர். அதாவது அந்த குழந்தைய நீங்க பீச்சுக்கு கூட்டிட்டு போகனும். அப்பறம் நீங்க கடல்ல குதிச்சு உங்களை கடல் இழுத்துட்டு போற மாதிரி பாவ்லா பண்ணனும் (அப்படியே உங்களை கடல் இழுத்துட்டு போனா அதுக்கு நான் பொறுப்பில்லை). அதை பார்த்து அந்த குழந்தை பயிந்து பேசிடும். இப்பவே கண்ண கட்டுதேனு பாக்கறீங்களா… இன்னும் இருக்கு!!!

ஹீரோயின்னு ஒருத்தவங்க (ரக்ஷிதா) வறுமையில வாடறவங்க (பாவம் துணிய பாத்தா அப்படித்தான் தெரியுது… ஆனா மினிஸ்டர் பொண்ணு) அந்த மார்க்கெட்ல ஏதோ ரிசர்ச் பண்றாங்க. என்ன ரிசர்ச்னு யாருக்கும் தெரியாது… ஆனா விஜய சுத்தி சுத்தி படம் எடுக்கறாங்க. ஒரு வேலை அதுதான் ரிசர்ச்சானு தெரியலை. ஸ்கிரின்ல நாலுல மூணு பகுதி இவுங்க எடுத்துக்கறாங்க.

வில்லன் பசுபதிதான் படத்தோட பெரிய ப்ளஸ் பாயிண்ட். அவருக்கு படத்தில் இரண்டு ரோல். ஒன்று வில்லன் அடுத்தது காமெடியன். அவர் செய்யும் காமெடிக்கு அளவே இல்லை. அவரோட இண்ட்ரொடக்ஷன் அருமை. கண்ணாடி டம்ப்ளர்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கொண்டிருப்பார். அப்போழுது (விஜயிடம் போட்டு கொடுத்த) கூட்டாளி ஒருவன் அவர் காலில் விழும் போது தவறி அந்த டம்ப்ளர்களை தட்டிவிடுகிறார். உடனே பசுபதி “நான் இவ்வளவு கஷ்டப்பட்டு கட்டின கோட்டைய ஒரே நிமிஷத்துல கலச்சிட்டயேடா”னு (டபுள் மீனீங்காம்!!! ) சொல்லிட்டு அவரை சட்டத்திடம்(?) ஒப்படைக்கிறார். அங்கே அவரே நீதிபதி மாதிரி வந்து காமெடியா அவரை சுத்தியளால் அடித்து கொல்கிறார்.

சோனியா அகர்வால் மதுரைல இவர் கலக்டரா இருக்கும் போது இவருக்கு அசிஸ்டெண்டா இருக்காங்க. வில்லன் வீட்ல ஏதோ ரகசிய டாக்குமெண்ட் எடுக்கறன்னு போயி மசாலா அரைச்சி அங்க இருக்குற 2 தினத்தந்தி கட்டிங்க பாத்ரூம்ல இருந்து விஜய்க்கு ஃபேக்ஸ் பண்றாங்க. (அந்த கட்டிங் கலக்டர் ஆபிஸ்ல இருக்கும்னு பாவம் அவுங்களுக்கு தெரியல.)

அத நம்ம தலைவர் பசுபதி எப்படி கண்டுபிடிப்பார்னா அவருக்கு அந்நிய மூச்சுக்காத்து அடிக்குமாம் (எப்படிடா இப்படி எல்லாம் சிந்திக்கறீங்க?) அதை வெச்சி அவர் சோனியா அகர்வாலை கண்டுபிடித்துவிடுவாராம். பிறகு வழக்கம் போல் விஜயை மிரட்ட விஜய் அந்த தினத்தந்தி கட்டிங்கை அடை மழையில் நினைந்து கொண்டு எடுத்து வருகிறார். பிறகு அங்கு நடக்கும் சண்டையில் படத்தில் இருக்கும் ஒரே நல்ல ஃபிகரான சோனியா அகர்வாலையும் கொன்று விடுகிறார்கள்.

படத்துல முழுக்க குத்து பாட்டுதான்… “மச்சான் பேரு மதுரை”, “பம்பரக் கண்ணு”, “எலந்தை பழம் எலந்தை பழம் உனக்குத்தான்” (நியாயமா பலாப்பழம்னுதான் பாடியிருக்கனும்) …

படத்தின் க்ளைமாக்ஸ்தான் வெயிட்டான சீன். ஊருல இருக்குற எல்லாருக்கும் அஞ்சி ரூபா செல் போன் விற்கிறார் பசுபதி. அதில் பாம் வைத்து சரியாக பத்து நிமிடத்திற்கு முன் விஜயிடம் இதை தெரிவிக்கிறான். இதை விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதை வெள்ளித்திரையில் காண்க!!!

(டைரக்டர் மாதேஷிக்கு தெலுகு ஃபீல்டில் நல்ல எதிர்காலம்ம் இருக்கிறது. ரவி தேஜாவை வைத்து இவர் படமெடுக்கலாம்)

லொள்ளு-3

லொள்ளு பேசி ரொம்ப நாளாயிடுச்சிங்க…
சரினு களம் எறங்கிட்டேன்

ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்… மழ நிக்கறதுக்குள்ள

மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்

அஜித்: அது!!!

———————————————————-

அருணாச்சலம்:

தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.

செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!

————————————————————

ரன்:

அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?

விஜயன்: போட்டது சாம்பார் சோறு… அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல…

————————————————————-

வல்லவன்

சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற… நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்

மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு…

————————————————————–

தவசி

பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா

இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்… ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்

கவிதை! கவித!! கவுஜ!!!

நேத்து எனக்கும் என் நண்பனுக்கும் நடந்த உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

“டேய் பாலாஜி, ப்ளாக்ல கதையெல்லாம் எழுதறியே! நீ ஏன் கவிதை எழுத முயற்சி பண்ண கூடாது?”

“என்னது கவிதையா??? ஏன்டா யாரும் என் பிளாக் பக்கம் வரக்கூடாதுனு முடிவு பண்ணிட்டயா?”

“இல்லைடா… நீ எழுதறதை எல்லாம் கதைனு ஒத்துக்குறாங்க இல்லை… அதே மாதிரி கவிதையையும் ஒத்துக்குவாங்க”

“அட நாதாரி!!! இத சொல்லத்தான் போன் பண்ணியா?”

“இல்லடா மச்சி… நான் சீரியஸாத்தான் சொல்றேன்”

“டேய்!!! கவிதை எழுதனும்னா லவ் பண்ணனும்… நம்மளப்பத்தி தான் தெரியுமே. அப்பறம் நமக்கு எப்படி கவிதை வரும்”

“டேய் லூசு… அதெல்லாம் ஒண்ணும் இல்லை… பாரதியார் எழுதல… அவர் என்ன லவ்வா பண்ணாரு”

“டேய் அவர் லவ் பண்ணாரா இல்லையானு நமக்கு எப்படிடா தெரியும். அவர் எல்லா பாட்டுலையும் கண்ணம்மானு ஒருத்தவங்க வருவாங்க… ஒரு வேளை அவருக்கும் லவ் ஃபெயிலர் இருந்திருக்கலாம். விட்டா மணிரத்னம் டைரக்ட் பண்ணல அதே மாதிரி நீயும் டைரக்ட் பண்ணுனு சொல்லுவ”

“அதெல்லம் தேவையில்லைடா… சமுதாய கோபமிருந்தா தானா கவிதை வரும்”

“அது என்னடா கோபம்? “

“இந்த சமுதாயத்து மேல உனக்கு கோபமிருக்கா இல்லையா? உண்மைய சொல்லு”

“ஆமாம்…கண்டிப்பா”

“என்ன கோபம்???”

” அஜித் படத்தையும், கேப்டன் படத்தையும் தொடர்ந்து ஃபிளாப் ஆக்கறாங்க இல்லை.. அதனால கொஞ்சம் லைட்டா கோபமிருக்கு. அதெப்படி உனக்கு தெரிஞ்சிது?”

“போடா நாயே!!! அன்னைக்கு கமல் கவிதைக்கு “சூப்பர்.. அருமையா எழுதியிருக்காரு”னு பின்னூட்டம் போட்டிருந்த”

“ஓ!!! அதுவா? ஒண்ணுமே புரியலை… எல்லாரும் அட்டகாசமா இருக்குனு சொல்லிட்டாங்க… கமல் எப்படியும் நல்லாதான் எழுதியிருப்பாருனு அந்த மாதிரி பின்னூட்டம் போட்டுட்டேன். இதெல்லாம் இப்ப ஏன்டா நோண்டற?”

“உன்கிட்ட இத கேட்டது என் தப்புதான்… நான் போனை வெக்கறேன்” சொல்லிட்டு வெச்சிட்டான்.

நானும் இத பத்தி ரொம்ப யோசிச்சேன்… அப்ப ஒரு சந்தேகம் வந்துச்சு. திருக்குறள் கவிதையா???
யார்ட்ட கேக்கலாம்னு தெரியல… சரினு நம்ம நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணேன்.

“டேய் மச்சி ஒரு பயங்கரமான சந்தேகம்டா”

“என்னடா??? சிக்கன் சாப்பிட்டா சிக்கன்குனியா வருமானா? அந்த சந்தேகத்துலதான் நான் மட்டன் சாப்பிட்டு இருக்கேன்”

“அதெல்லாம் இல்லை. திருக்குறள் கவிதையா?”

“என்னடா திடீர்னு இப்படி கேட்டுட?”

“சொல்லு… அது கவிதையா?”

“இல்லைடா மச்சி… கவிதைனா கடைசி வார்த்தை எதுகை, மோனைல வரும் இல்ல”

“அப்ப அது ஒருவேளை கட்டுரையா இருக்குமோ???”

“இருக்கலாம். ஆனால் கட்டுரைனா பெருசா இருக்கும்டா. எதுக்கும் நீ நம்ம பாண்டிய கேளு அவந்தான் இதுல எல்லம் பெரிய ஆளு”

சரினு பாண்டிக்கு போன் செய்தேன்

“டேய் பாண்டி ஒரு சந்தேகம்”

“என்ன சொல்லு”

“திருக்குறள் கவிதையா?”

“ஆமாம். இதுல என்ன சந்தேகம்”

“எப்படி சொல்லற?”

“திருக்குறள் படிச்சா உனக்கு புரியுமா?”

“புரியாது?”

“திருக்குறள் பாட புத்தகத்துல எந்த பகுதியில வருது?”

“செய்யுள் பகுதில”

“முக்கியமான ஒண்ணு… “உன்னருகே நானிருந்தால்”ல பார்த்தி என்ன சொன்னாரு?”

“என்ன சொன்னாரு?”

“ஒரு வரி எழுதும் போது அந்த வரில நிறைய இடமிருந்தாலும் அடுத்த வரில எழுதுனா அது தான் கவிதைனு சொன்னாரில்லை”

“ஆமாம்”

“அப்ப திருக்குறள் கவிதை தானே???”

“ஆமாம்டா மச்சி… நீ பெரிய ஆள்தாண்டா”

————————————

பி.கு: கவிஞர்களே… இது உங்களை கிண்டல் பண்ணி எழுதின பதிவு இல்லை. எந்த கவிதை படிச்சாலும் நமக்கு ஒண்ணும் புரிய மாட்டீங்குதுங்கற ஃபீலிங்ல எழுதனது. தப்பா எடுத்துக்காதீங்க 😉

டைரி குறிப்புகள்

போன கதையை படிச்சிட்டு நம்ம ராம் ஏதோ டைரி குறிப்பை பார்க்கற மாதிரி இருக்குனு சொல்லிட்டாரு…

எனக்கு இது என்னோட பெங்களூர் டைரி குறிப்பை நியாபகப்படுத்திடுச்சி…

அடுத்தவங்க டைரி படிக்கறது தப்புனு ஃபீல் பண்ற நல்லவங்க இதோட நிறுத்திக்கோங்க…

இதுக்கு மேல படிக்கறவங்க.. என்ன மாதிரியே ரொம்ப நல்லவங்கனு வெச்சிக்குவோம் 🙂

காலை 7 : வீட்டிலிருந்து அம்மா போன் செய்திருந்தார்கள்.
அம்மா: என்னப்பா ஆபிஸிக்கு கிளம்பிட்டயா?
நான்: குளிச்சிட்டேன்மா… சாப்பிட்டு கிளம்பனும் அவ்வளவுதான்…

காலை 8: அலாரத்தை நிறுத்திவிட்டு மீண்டும் படுத்தேன்…

காலை 8:30: ஹீட்டர் போட்டுவிட்டு மண்டும் வந்து படுத்தேன்…

காலை 9 : ஒருவழியா எழுந்திரித்துவிட்டேன்!!!

காலை 9:30 : டிபன் சாப்பிட்டு ஆபிஸிற்கு கிளம்பினேன்

காலை 10: என் சீட்டிலிருந்தேன்…
வந்த இ-மெயில் எல்லாம் படிக்க ஆரம்பித்தேன்

காலை 10:30: காபி குடிக்கும் நேரம். கேண்டின் சென்றேன்

காலை 11: மீண்டும் சீட்டிற்கு வந்து வந்திருந்த மெயிலுக்கு எல்லாம் பதில் சொல்லி மெயில் அனுப்பினேன்…

சுந்தர் நாயிக்கு அறிவே இல்லை. 15 பேருக்கு இந்த மெயில ஃபார்வேர்ட் பண்ணலனா யாராவது ரத்த வாந்தி எடுத்து சாவாங்களா? இந்த நாயெல்லாம் படிச்சி என்னத்த கிழிச்சுது?

சரி எத்தனை பேத்துக்கு அனுப்பனும்னு இன்னொரு தடவை பாத்துக்குவோம். பயமெல்லாம் ஒன்னும் இல்லை… சும்மா ஜாலிக்குத்தான்…

ராஜேஷ்தான் உண்மையாலும் நல்ல பிரெண்ட்… நல்ல வேளை இந்த மெயில எனக்கு அனுப்பனான். இந்த மெயிலை மட்டும் 20 பேருக்கு அனுப்பினேனா எனக்கு எப்படியும் AOLம் Microsoftம் $765,234 கொடுப்பாங்க. அப்பறம் அந்த காச வெச்சி நாமளும் இந்த மாதிரி ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிடனும். எத்தனை நாளைக்கு தான் இவனுங்களுக்கு கீழ நம்ம வேலை பாக்கறது. குடுக்கற காசுக்கு பிழிஞ்செடுத்தடறானுங்க..

மதியம் 12:00: சாப்பாட்டு நேரம் வந்தாச்சு. வழக்கம் போல் ஹைதராபாதி தம் பிரியாணி சாப்பிட்டு ஒரு ரவுண்டு வாக்கிங் போனேன்.

மதியம் 2: மீண்டும் சீட்டிற்கு வந்தேன்.
சரி நேத்து “R”ல இருக்கவங்களுக்கு போன் பேசியாச்சு. இன்னைக்கு “S”ல இருக்கவங்களுக்கு பேசனும். செல் பொன் எடுத்து “S”ல் ஆரம்பிக்கும் நண்பர்களுக்கு போன் செய்தேன். சுதிருக்கும் என்னை போலவே வேலை அதிகமாம். கம்பனி மாற வேண்டும் என்று சொல்லி கொண்டுருந்தான். எனக்கும் ஏதாவது ஓப்பனிங்ஸ் இருந்தால் சொல்ல சொன்னேன்.

மதியம் 3:30: டீ நேரம்.

மதியம் 4: டீம் மீட்டிங். இந்த மேனஜர் ரொம்ப மோசம். எல்லாரும் வீட்டுக்கு கிளம்பற நேரத்திற்கு மீட்டிங் வைத்திருக்கிறார். “That’s a good idea”, “sorry, I dont think it will work”, “it works as per the client requirement”, “Its not our responsibility. Onsite should have taken care of it”. இந்த வாக்கியங்களை தேவையான இடத்தில் பயன்படுத்திவிட்டேன்.

மாலை 5: ஸ்னாக்ஸ் சாப்பிட கேன்டீன் சென்றோம். நேத்து பானி பூரி சாப்பிட்டாச்சு… இன்னைக்கு பேல் பூரி சாப்பிடுவோம்.

மாலை 6: டாக்குமண்ட் வேலை செய்ய ஆரம்பித்தேன்… நடுநடுவே மதியம் வந்த மெயிலுக்கு பதில் அனுப்பினேன். அப்படியே சில நண்பர்கலிடமிருந்து வந்த போன் கால்களுக்கும் பதில் சொல்லிவிட்டு ஒரு வழியாக வேலையை முடித்தேன்.

இரவு 8: ஆன் சைட்டிற்கு டாக்குமெண்டை மெயில் செய்தேன்.

இரவு 9: வீட்டிற்கு புறப்பட்டேன்…

இரவு 10: சாப்பாடு முடித்துவிட்டு… சன் மியுசிக் பார்த்து கொண்டே நண்பர்களுடன் அரட்டை

இரவு 12:30: படுக்கைக்கு சென்றேன்…

இதுதாங்க நம்ம பெங்களூர் வாழ்க்கை… எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பாத்துருக்கேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்!!!

அதுக்குதான் இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடானு சொல்லி அமெரிக்காவுக்கு அனுப்பி வெச்சியிருக்காங்க 😉