நீங்க இப்ப பாக்கறது கவுண்டர் பெல்ஸ் Devil’s Advocate part – 3
இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர் தமிழக மக்களின் மனதில் மன்மத ராசாவாக இடம் பெற்றிருக்கும் தனுஷ்…
க: வாங்க தனுஷ்!
தனுஷ் அது எப்படிங்க உங்க அண்ணன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கும் போது இந்த சின்ன வயசுல நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.
த: எனக்கு சின்ன வயசுல இருந்தே சீக்கிரம் கல்யாணமாகி வாழ்க்கையில செட்டில் ஆகணுங்கறதுதான் லட்சியம்
க: ஆஹா லட்சியமென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். அவனவன் படிச்சி வாழ்க்கையில பெரிய ஆளு ஆகனும்னு ஆசைப்பட்டா நீங்க சின்ன வயசுல இருக்கும் போதே சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனுங்கறத லட்சியமா வெச்சிருக்கறீங்க. அத வெக்கப்படாம வெளிய வேற சொல்லிட்டு அலையறீங்க.
த: ஆமாங்க. கடைசியா படிச்சி பெரிய ஆளாயி என்ன பண்ணப்போறாங்க? எல்லாரும் கல்யாணம் தானே பண்ணிக்க போறாங்க. அதனாலத்தான் நான் அதை சீக்கிரமாவே பண்ணிட்டேன்
க: ஏன்டா எல்லாரும் கடைசியா சாகத்தானே போறாங்க? அதுக்கு ஆசைப்படுவியா? பேசறாம்பாரு…பெரிய இடமா கிடைச்சிது, விட்டா போயிடும்னு சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு பேசற எகத்தாளத்தப்பாரு.
ஆமாம் அது என்ன பேரு இந்திய ப்ரூஸ்லி?
த: அதுவா? நான் போடற கராத்தே சண்டைய பார்த்து ரசிகர்கள் அப்படி கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க.
க: ஏன்டா ப்ரூஸ்லி ஒரு அடி அடிச்சா நீ தாங்குவியா? அவர் எப்படியும் செத்து போயிட்டாருங்கர தைரியத்தில நீயா வெச்சிக்கிட்ட. சரி விடு… அந்த காலத்துல தென்னிந்திய ஜேம்ஸ் பாண்ட் மாதிரினு வெச்சிக்கிறோம். சரி உன்னோட படத்துலயே உனக்கு பிடிச்சது எது?
த: சுள்ளான். அதுலதான் டைரக்டர் ரமணா என்னை ஆக்ஷன் ஹீரோவா காண்பிச்சாரு.
க: ஓ! நீயும் பசுபதியும் மாத்தி மாத்தி
டேய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்னு கத்துவீங்களே அந்த படமா?
ஏன்டா ஓவரா சவுண்ட் விட்டு நடிச்சா அது ஆக்ஷன் படமா?
த: அதுல பஞ்ச் டயலாக்லாம் வேற இருக்குமே!!!
க: ஓ! அதுவா? அந்த தீப்பந்தத்த எடுத்துட்டு வாங்கப்பா. தம்பிய சுட வைக்கலாம்
த: எதுக்குங்க?
க: நீ தான்டா சொன்ன! சுள்ளான் சூடானேன் சுலுக்கெடுத்துடுவேனு. எனக்கு கால்ல 2 நாளா சுலுக்கு அதான் உன்னைய சூடாக்கி சுலுக்கெடுக்க வைக்கலாம்னு பாக்கறேன்.
த: ஐயய்யோ அது சும்மா ரைமிங்கு பேசனதுங்க…
க: இந்த பாரு இனிமே சும்மா இப்படி மொக்கைத்தனமா பஞ்ச் டயலாக் ஏதாவது பேசின… அவ்ளோ தான். நான் எதுவும் பண்ண மாட்டேன். மக்களே படத்த ஃபிளாப்பாக்கிடுவாங்க…
த: அதுல க்ளைமாக்ஸ் காட்சி கூட அருமையா இருக்குங்களே!
க: டேய் வேணாம் என்னைய டென்ஷனாக்காத! அது ஒரு க்ளைமாக்ஸ் அதுக்கு உனக்கு பெருமை வேற…உன்னைய பேட்டியெடுக்கறதுக்காக என்னைய அந்த ட்ரீம்ஸ், புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எல்லாம் வேற பாக்க வெச்சிட்டானுங்க. ஏன்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாடா?
த: புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பார்த்தீங்களா? அது அப்படியே நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மாதிரியே இருக்குமே?
க: டேய் டூபாகூர் மண்டையா… அது உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இருந்துச்சா? இதுக்கு முன்னாடி நீ அந்த படம் பார்த்திருக்கயா? தப்பி தவறி இத வெளிய சொல்லிடாத… எல்லாம் கல்லால அடிச்சியே கொன்னுடுவானுங்க…
சரி இதுக்கு மேல நீ கேள்வி கேட்டா தாங்க மாட்ட. ஓடி போயிடு!!!
மக்களே! என்ன நடந்துச்சுனு நீங்களே பாத்துட்டுதான் இருக்கீங்க. நான் சொல்றதுக்கு இதிலே ஒண்ணுமில்லை.நாளைக்கு உங்களை வேற ஒரு பிரபலத்துடன் சந்திக்கிறேன்… நன்றி! வணக்கம்!!!
Filed under: நகைச்சுவை | 37 Comments »