பிரிவு – 4

பிரிவு-1 பிரிவு-2 பிரிவு-3

“திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்”

“ஹிம்… இப்பதான் ஐஸ் சொன்னா”

“இப்ப சந்தோஷமா???”

“என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???”

“ஹிம்… அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்”

“ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்”

“சரி… ”

………………

அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.

“செக் லிஸ்ட் பாத்தியா???”

“ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்”

“நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்… கதை விடாத”

“சரி… அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???”

“இரு… நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ”

“ஏன் சன்டே உன் பிளான் என்ன???”

“நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு”

“சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???”

“மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்”

“நீ அவசியம் போகனுமா?”

“ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்… நான் கண்டிப்பா போயாகனும்… ஏன் கேக்கற???”

“ஒன்னுமில்லை… அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க”

“ஏன் வீணா டென்ஷன் ஆகற”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்”

“ஏன் இப்படியெல்லாம் பேசற”

“அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்”

“சரி”

……………………….

“சொல்லு”

“நைட் கூப்பிடறன்னு சொன்ன… ஏன் கூப்பிடல???”

“இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்”

“மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???”

“திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க… முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்… போதுமா?”

“இப்ப எங்க இருக்க?”

“ஆபிஸ்லதான்”

“சரி நீ வேலை பாரு… அப்பறமா கூப்பிடு…”

“சரி… நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்”

“ஓ.கே…. பை”

……………………………………

“தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???”

“சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல”

“நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல”

“நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்… ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல”

“நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்”

“நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்… இல்ல”

“சரி திட்டாத… இப்ப நாந்தானே கூப்பிட்டேன்… நீ ஒன்னும் கூப்பிடல இல்ல”

“சரி விடு… அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு… உள்ளையே சாப்பிட்டுக்கறேன்”

“சரி… நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு”

“ஓகே… பை”

“பை”

………………………….

வெள்ளி இரவு 11 மணி

“நான் தனா பேசறேன்”

“தெரியுது சொல்லு”

“நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்”

“சரி. எல்லாம் வாங்கிட்டயா”

“எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்”

“எப்ப திரும்ப வருவ???”

“தெரியல… இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல… நான் மட்டும் என்ன லூசா???”

“அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல”

“உங்களை எல்லாம் மறப்பனா???”

“இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல… நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???”

“உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்… ”

“ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???”

“இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?”

“நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???”

“நீ போகலயா???””

“”அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை”

“அத நீ தான் சொல்லியிருக்கனும்”

“எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன… ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல”

“திவ்யா… இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????”

“ஏன் கேக்கற???”

“சொல்லு”

“எனக்கு தெரியல…”

“இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா… அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???”

“எனக்கு சாப்பிட பிடிக்கல”

“ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்.”

“தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல…. என்ன விட்டுட்டு நீ போற… எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? ”

“எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு… நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?”

“தனா என்ன சொல்ற???”

“எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்”

“நல்ல நேரம் பாத்து கேக்கற தனா… இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?”

“அப்படினா… என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???”

“நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல”

“திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்… நான் புறப்பட்டு வரன்”

“ஏய் லூசு… மணி 11:30… நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்”

“சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத… நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு”

“முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது”

“ஏன்???”

“உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல”

“யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா… நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்”

“ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு”

“லூசு… பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்”

“அப்ப சரி… நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது”

“சரி. நீ போயிட்டு எப்ப வருவ???”

“நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க… ”

“அப்படினா???”

“1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)”

………………………..

ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.

“சாப்பிட்டயா???”

” ”

“திட்டாத… அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்… பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. .”

” ”

“நிஜமாதான் சொல்றேன்…
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்”

” ”

“‘சும்மா சொன்னேன்… அவன் நல்ல பையன் தான்…
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்…. அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்… இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/

” ”

“ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு”

” ”

(முற்றும்…)

பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் “No Comments”…

பகத்சிங் தீவிரவாதியா???

பகத்சிங், ராஜ குரு, சுக் தேவ் மூவரும் தீவிரவாதிகள் என பத்தாம் வகுப்பு ICSE சிலபஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதை எதிர்த்து வழக்கு தொடர போவதாக மகாராஷ்ட்டிர அரசு தெரிவித்துள்ளது.

மேலும் விவரமறிய:
http://www.hindustantimes.com/news/181_1747191,000900040001.htm

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க!!!

நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க…

பாகம் 1 – முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 – தேவையான புத்தகங்கள்
பாகம் 3 – ஆங்கிலத்தில் பேசலாம்… எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 – ரெசுமே
பாகம் 5 – ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 – டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 – பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 – சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 – மென்பொருள் பயிலகம்

சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்… ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்… கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!

நன்றி

உழைப்பே உயர்வு தரும்!!!

தெய்வ குத்தமாயிடுமாம்…

அமெரிக்கா வந்து புதிது. வார நாட்கள் ஓரளவு பிரச்சனையில்லாமல் இருந்தது. வார இறுதி நாட்களில்தான் பிரச்சனை. பனி அதிகமாக இருந்ததால் வெளியே செல்ல முடியாத நிலை. வீட்டிலும் தனியாக உட்கார்ந்திருந்தால் மனம் வெறுமையாக இருந்தது.

ஏன்டா இங்க வந்தோம்னு எனக்கு நானே பல முறை கேட்டு கொண்டேன். இந்தியாவில் எப்போழுதும் நண்பர்களுடன் தங்கியிருந்ததால், தனிமையென்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் என்னோட மட்டுமே இருப்பது உயிர் போகும் வலியாக இருந்தது. பேசாம எப்படியாவது திரும்ப போயிடலாமனு ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

அந்த நேரத்தில்தான் பிளாக் அறிமுகமானது. இந்தியாவில் இருந்த போது ஒரு சில நண்பர்கள் அவர்களுடைய பிளாக் பற்றி சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்திலே இருந்தது. மேலும் அங்கே எனக்கு வேலையே இரவு 9 மணி வரை இருக்கும். வீட்டிற்கு வந்தால் நண்பர்களுடன் செலவு செய்யவே நேரம் சரியாக இருக்கும். அதனால் பிளாக் படிக்கவோ, எழுதவோ தோன்றவில்லை.

நான் பார்த்த முதல் தமிழ் பிளாக் டுபுக்கு அவர்களுடையது. குட்டி நாய்கிட்ட தேங்காய் மூடி கிடைச்சா என்ன பண்ணும். நானும் அதுவே தான் செய்தேன். அந்த பிளாக்ல இருக்கிற ஒரு பதிவு விடாம 2 -3 தடவை படித்தேன். கிட்டதட்ட 1 மாசம் தினமும் அதுல தான் இருந்தேன். தமிழ்மணம் அந்த பிளாக் மூலமா அறிமுகமாச்சு.

அடுத்து என்னை கவர்ந்த பிளாக் $elvan அவர்களுடையது. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு கனலை எரித்த கற்பின் கனலி. அந்த ஒரு பதிவை படித்ததிலிருந்து அவருடைய அனைத்து பதிவையும் படித்தேன். அந்த ஒரு பதிவை நிறைய பேருக்கு அனுப்பி வைத்தேன்.

கர்ணன் படத்துல கண்ணன் குந்தியிடம் சொல்லும் வசனம் “அத்தை! ஆசை யாரை விட்டது???”. இந்த வசனம் எனக்கு சரியாக பொருந்தியது.
நிறைய பிளாக் படித்த பிறகு நாமும் ஒன்று ஆரம்பிப்போமே என்று தோன்றியது.
தமிழில் எழுத யாரை கேட்கலாம் என்று தெரியவில்லை.

பொதுவா எனக்கு என் பேர்ல யாரையாவது பார்த்தால் பிடிக்காது. அதுக்கு எதுவும் பெருசா காரணம் இல்லை. ஸ்கூல்ல எப்பவுமே நாம வாத்தியார்கிட்ட நல்ல பிள்ளைனு பேர் வாங்கற டைப் (காலேஜ்ல இதுக்கு நேரெதிர்).. என் பேர கெடுக்கறதுக்குனே கொஞ்ச பேர் இருந்தானுங்க… அதனால அப்படி ஒரு எண்ணம்.

ஆனால் நான் ஆரம்பிக்கனும்னு நினைச்ச பேர்ல ஒருத்தர் இருந்தாரு. அதுவும் ஊரு, பேரு ரெண்டுமே ஒன்னாயிருக்கு. அதுவும் அவர் பதிவெல்லாம் நமக்கு புரியாத அளவுக்கு அதி புத்திசாலித்தனமா இருக்கு. நம்ம இப்ப அவர் பேர கெடுக்க போறமானு பயம் வந்திடுச்சு. சரி தமிழ்ல எப்படி எழுதறதுனு அவர்டயே கேப்போம்னு கேட்டேன்.

அடுத்த 5 நிமிடத்திற்குள் ஒரு விளக்கமான மெயில். அதுவும் வெறும் லிங் மட்டும் இல்லாமல் விளக்கத்துடன். அவர் ஒரு ஆளானு சந்தேகம் இன்னும் நிறைய பேருக்கு இருக்கு ;). ஆமாம் அது நம்ம பாபா தான் (பாஸ்டன் பாலா).

அதுக்கு பிறகு நான் பிளாக் ஆரம்பிப்பதற்குள் 2 மாதம் ஆனது. எங்கே தவறாக நினைப்பாறோ என்று நான் என்னை பற்றி அவருக்கு சொல்லவே இல்லை (15 நாட்களுக்கு முன்பு வரை). அவர் பேரை கெடுக்கற அளவுக்கு நான் எழுதலன்னு நினைக்கிறேன்… (நானும் பாஸ்டன் பாலாஜி தாங்க ;))

எனக்கு பிளாக் மூலமா நட்பாகி போன் பண்ணி, தமிழ்மணத்துல வீணா வம்புதும்புக்கு எல்லாம் போகாம எதாவது எழுதுனு சொன்னவர் உதய். அதற்கு பிறகு நான் அதிகமா எந்த வம்பு தும்புக்கும் போகலை.

தமிழ்மணத்தில் இணைந்துள்ளவர்களில் என்னை பார்த்து பேசிய ஒரே நபர் (சென்ற வாரம் விழாயன் முடிய), நம்ம உறக்கம் தொலைத்த இரவுகளில் நாயகன் கார்த்திக் பிரபு. என் மேல இருக்கற பாசத்துல என்னைப் பற்றி ஒரு பதிவே போட்டுட்டான். இந்த பதிவுக்கும் இவர்தான் காரணம்.

என்னுடைய இந்த பிளாக் டெம்ப்லேட் மாற்றி சரியாக வடிவமைத்து கொடுத்தவர், என்னையும் கதை எழுத வைத்தவர் நம்ம கப்பி.

இவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இதில் தெரிந்தோ தெரியாமலோ எனக்கு உதவியவர்கள் பலர். இவர்களுக்கு எல்லாம் பிறகு நன்றி தெரிவித்துக் கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் நாளை என்பது நிதர்சனமில்லை என்பதால் இன்றே தெரிவித்துக்கொள்கிறேன்.

அது என்னடா தெய்வ குத்தம்னு கேக்கறீங்களா??? ஏதோ ஆறு, ஆறுனு எல்லாரும் எழுதனாங்கலாம். நானும் எழுதனும்னு நம்ம கார்த்திக் பிரபு சொல்லிட்டாரு. அதனால ரெண்டையும் ஒன்னாக்கிட்டேன்.

பிகு:
எப்படியோ 50 பதிவு போட்டாச்சு.

லொள்ளு

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்…

சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே…
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு…

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா… உனக்கு வலிக்கும்டா… நீ அழுவடா…
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்… ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்…
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை “தமிழ்”

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி… அதனால பறந்து போயிடுச்சு…
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா… பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது… பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் 😉

பிரிவு – 3

பிரிவு -1 பிரிவு-2 பிரிவு-4

ஞாயிறு இரவு 9 மணி.
செல்போன் சிணுங்கியது

“ஏய் சொல்லு. எங்க இருக்க? ஊருல இருந்து வந்துட்டியா?”

“ஒரு சின்ன பிரச்சனை”

“என்னாச்சு. எங்க இருக்க?”

“நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்”

“என்ன கிருஷ்னகிரில இருக்கியா? மணி என்னாச்சு”

“நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு”

“எத்தனை மணிக்கு புறப்பட்ட??”

“4 மணிக்கு”

“ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா?”

“சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்”

“சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?”

“எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்”

“பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு”

“சரி”

……………………

ஓசூர், இரவு 10::30

“தனா நான் ஓசூர் வந்துட்டேன்”

“இப்ப எங்க இருக்கற???”

“ஓசூர்ல தான்”

“லூசு, ஓசூர்ல எங்க இருக்கற??”

“நீ எங்க இருக்கற???”

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”

“இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்”

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

“ஏய் நீ எதுக்கு இங்க வந்த???”

“எதுவும் பேசாத அடிச்சிட போறேன்”

“ஏன் இப்படி கோவப்படற???”

“மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா???”

“பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்”

“மனுசனை டென்சன் ஆக்காத! வந்து வண்டில உக்காரு”

“எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல”

“இப்ப வரியா! இல்ல நான் கிளம்பட்டுமா???”

“இரு வரன்”

…………………………

பெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்…

“ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்”

“சரிங்க… உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா???”

“உனக்கு என்னுமோ ஆயிடுச்சி”

“பேசாம வா”

…………………………………..

BTM, PG

“ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்”

“பஸ் பிரேக் டவுன்”

“இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத”

“ஏன்???”

“வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க… இப்ப தான் எல்லாம் வெளிய வருது”

“ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா???”

“யாரு”

“தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்”

“நல்லதா போச்சு”

“நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்”

“அடிப்பாவி!!! வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா… அவனை நீ திட்டியிருக்க!!!”

“எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்”

“மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்”

“சரி”

ஐந்து நிமிடம் கழித்து…

“அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா???”

“அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்”

“இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்”

………………

மணி 1:30. செல்போன் சிணுங்கியது.

“என்ன தூங்கலையா???”

“நீ எங்க இருக்க???”

“ஹிம்… சுடுகாட்டுல”

“ஏய் சொல்லு”

“நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க??? வீட்லதான்”

“சரி. சாரி”

“எதுக்கு”

“நான் உன்னை திட்டினதுக்கு”

“சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு”

“சரி… குட் நைட்”

“குட் நைட்”

………………..

2 நாட்களுக்கு பிறகு. PGயில்

“ஏய் ஐஸு!!! யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க?”

“தனாட்ட”

“கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா? நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்”

“டேய்! அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்”

“ஏய் வேண்டாம்!!! நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்”

“சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x”

“இப்ப ஏன் கட் பண்ண… நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்”

“எதுக்கு டென்ஷன் ஆகற???? நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்”

“என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த???”

“அந்த நாயிக்கு ஆன் – சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு… போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.
6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்”

“நீ கேட்டயா???”

“கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்”

“எவ்வளவு நாள்???”

“லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா?”

“”

“நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க???”

“ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்”

…………………………

“தனா… நான் திவ்யா பேசறேன்”

“”சொல்லு”

“ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன?”

“ஐஸ்வர்யா சொல்லிட்டாளா???”

“ஆமாம். சொல்லு”

“எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு”

“அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன???”

“இப்ப என்ன வேணும் உனக்கு???”

“நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்???”

“காரணம் எதுவும் கிடையாது”

“நீ போகனும். அவ்வளவுதான்…… இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது”

“நீ எதுவும் சொல்ல வேணாம்… எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு”

“உன் இஷ்டம்… நான் சொன்னா நீ கேக்கவா போற????”

“சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்”

“பாக்கலாம். குட் நைட்”

“பை”

…………………………..

“ஏய் திவ்யா! தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா???”

“இல்லை. இன்னும் 2 வாரத்துலயா???””

“ஆமாம்”

“என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க”

“அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க… அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்”

” ”

(தொடரும்…)

வாழ்த்துக்கள் + நன்றி

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்ற

கொங்கு ராசா
கௌதம்
ராசுக்குட்டி
இளா

ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெற்றி பெறாத பல நல்ல படைப்புகளை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

என்னுடைய கொல்ட்டி கதைக்கு ஓட்டுப் போட்ட 20 பேருக்கும் என் நன்றி.

மேலும் நல்ல படைப்புகள் வெற்றி பெற உதவிய பாஸ்டன் பாலாவிற்கும், தேன் கூடு நிர்வாகிகளுக்கும் என் நன்றி.

பிரிவு – 2

பிரிவு-1 பிரிவு-3 பிரிவு-4

பவித்ரா ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூர்

“ஐஸு ட்ரீட் எனக்குதான்… நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???”

“டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற”

“யாரு நாங்க கூச்சப்பட்டமா???”

“வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்.”

“சரி… ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?”

“எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!”

“இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?”

“ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்”

“ஆச்சர்யமா இருக்குங்க”

“ஏன்???”

“ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!”

“டேய்… ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா”

“உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க”

“தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, “இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு”. நான் உண்மையான இந்தியங்க.”

ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.

………………………

10 நாட்களுக்க்கு பிறகு

“தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்”

“சொல்லு”

“திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்”

“சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்”

…………………………………

“ஹலோ… திவ்யா???”

“ஆமாம். நீங்க யார் பேசறது?”

“நான் சஞ்சய் ராமசாமி பேசறன்”

“ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்”

“பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே”

“உங்களை மறக்க முடியமா?”

“சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்”

“நீங்க எங்க தங்கி இருக்கீங்க?”

“நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்”

“சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?”

“சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்”

“சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க”

“ஓகே… நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க”

“சரிங்க… பாக்கலாம். பை”

…………………………………….

சனி கிழமை காலை 10 மணி.
செல் போன் சிணுங்கியது.

“ஹலோ. தனா ஹியர்”

“நான் திவ்யா பேசறேன்”

“சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??”

“தூங்கிட்டு இருக்க்கீங்களா?”

“ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்…”

“நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!”

“சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க”

………………………………….

12:15, பவித்ரா ஹோட்டல்

“நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன். சாரிங்க”

“எதுக்கு???”

“இல்லை… நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது”

“ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்”

“நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்”

“ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க”

“சரிங்க”

தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.

“ஐயய்யோ… என்னங்க இப்படி மழை பெய்யுது”

“இதுக்கு தாங்க… நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது”

முறைத்தாள்.

“கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்”

“சரிங்க… இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்”

“VB கத்துக்கறீங்க போல இருக்கு”

“ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது”

“சரி கத்துக்கோங்க…. அதுதான் உங்களுக்கும் நல்லது”

நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.

………………………………..

திங்கள் காலை 10 மணி.

“ஹாய் தனா” ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

“ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???”

“ஐஸ்வர்யா கொடுத்தா”

“ஹிம்… அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???”

“நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்”

“ஹிம்”

இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.

அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.

…………………………..

“டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா”

“என்ன பண்றோம்”

“அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா… இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா… எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது”

“அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்… படி”

“டேய்! ஓவரா பேசாதடா”

“சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???”

“ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்… நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???”

…………………..

இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.

“ஏய்! சொல்லு”

“சாப்பிட்டியா”

“இல்ல… ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு”

“ஒன்னுமில்லை”

“அழுதயா??? எனக்கு தெரியும்… உன் குரல் ஒரு மாதிரி இருக்கு”

” ”

“ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???”

“என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் ”

“என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!”

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

“ஏய் சாரி… ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு”

“அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற”

“உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க”

“நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???”

” ”

“ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு”

“நீ என்ன சொன்ன?”

“இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்”

“இப்ப நான் என்ன செய்யனும்”

” நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்”

“சரி எதுவும் கவலைப்படாம தூங்கு…குட் நைட்”

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை….
“நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?” என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்…..)

பிரிவு

பிரிவு-2 பிரிவு-3 பிரிவு-4

“தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”

“சொல்லு… பாக்கலாம்”

“ஒண்ணும் இல்லை… என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்”

“திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?”

“ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்”

“சரி சொல்லு என்ன பண்ணனும்”

“இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்”

…………………….

“ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்”

” ”

“இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ”

………………….

“தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ”

“சரி”

“டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத”

“சரி…. சொல்லிட்ட இல்ல. ஃபிரியா விடு”

…………………

“ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்”

என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.

“சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?”

“என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?”

“சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?”

“ஐயய்யோ வேணாங்க… நான் வேற ஆளை பாக்கறேன்”

“கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?”

“நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?”

“சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்”

ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்.

……………………………..

ஒரு வாராத்திற்கு பிறகு…
எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது

“ஹலோ தனா ஹியர்”

“நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்”

“எந்த ஐஸ்வர்யா?””

“நீங்க தனபாலன் தான?”

“ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க”

“உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே”

“நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க”

“சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை”

“சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். ”

“இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க”

“ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்”

“புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்”

ஒரு வழியாக விளக்கினாள்.

“உங்களுக்கு VB தெரியுமா?”

“தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு”

“ஃபிரியா விடுங்க… எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?”

“திங்க கிழமை காலைல. முடியுமா?

“என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்”

“சாரிங்க… இந்த ஒரு தடவை மட்டும்”

“இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???”

“ட்ரீட்டா??? ”

“பின்ன… போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்”

” ”

“என்னங்க பேச்சையே கானோம்”

“சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்…..
எங்கனு நீங்களே சொல்லுங்க”

“லீலா பேலஸ்”

“இதெல்லாம் கொஞ்சம் ஓவர்…”

“சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற “Cafe Coffee Day”ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???”

“சரிங்க”

“திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்”

“ரொம்ப தேங்ஸ்ங்க”

……………………………….

“டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே… உண்மையா???”

“ஆமாம்… அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்”

“கிழிக்கும்… இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!”

“ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா… இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.
நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்”

“சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ”

“ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு”

“சரி”

…………………

அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

“ஹலோ! தனா ஹியர்”

“நான் திவ்யா பேசறேன்”

“சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???”

“ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்””

“சொல்லுங்க”

“நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?”

“இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே”

“நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா”

“சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்”

“நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்”

“உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே””

“நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்”

“சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்”

“வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே… இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?”

“சரிங்க……”

(தொடரும்)

சோதனை பதிவு

அடைப்பலகை மாற்றியதால் கடைசியாக இட்ட பதிவும், பின்னூட்ட்டங்களும் தமிழ்மண முகப்பில் வரவில்லை. அதனால் ஒரு சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை 😦

சிரமத்திற்கு மன்னிக்கவும